கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம்

Tuesday, 31 December 2013

சைவசமயம் - கடவுள்

 







அருணகிரிநாதர்

ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று

ஈசனுடன் ஞான மொழி பேசும் முகம் ஒன்று

கூடும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்று

குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்று

மாறு படு சூரரை வடித்த முகம் ஒன்று

வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்று

ஆறுமுகமான பொருள் நீ அருள வேண்டும்

ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமானே!

Monday, 30 December 2013

1000-2000 ம் ஆண்டுகள் பழைமையான திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் ஆலயம்

தேவரப்பாடல் பாடப்பட்ட காவிரி வட கரைத்தலங்களில் 3 வது தலம்

தாய்லாந்திலுள்ள ஏகமுக லிங்கம்...7ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது


சிந்து சம வெளியில் கண்டெடுக்கப்பட்ட சிவ லிங்கங்கள்...இதனால்,பூர்வ பாரதம் சைவஸ்தானாக இருந்து,அங்குள்ள மக்கள் பெரும்பாலானோர் சைவர்களே என நிருபிக்கப்பட்டுள்ளது


ஒரிஸ்ஸா புவனேஸ்வரிலுள்ள லிங்கராஜர் கோவில்.6ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது


கோவாவிலுள்ள மஹாதேவர் ஆலயம் ...12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது


வாதாபியிலுள்ள Malegitti சிவாலயம்...7ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது —


மத்திய பிரதேசத்திலுள்ள ஓம்காரேஸ்வரர் கோவில்...10ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது


ஆந்திர பிரதேசத்திலுள்ள பரசுராமேஸ்வரர் கோவில்...இக்கோவிலின் கர்பக்கிரகத்தில் இருக்கும் சிவ லிங்கம் கிமு 2ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்டது,அதாவது 2200 வருஷங்கள் பழமையுடையது


இந்தோணேசியாவில் இருக்கும் பிரம்பானன் சிவன் கோவில்..8ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது..இந்தீணேசியாவிலேயே மிகப் பெரிய கோவில்,இதுவே..தெற்கிழக்காசியாவிலுள்ள மிகவும் பெரிய மற்றும் அழகான கோவில்களில் இதுவும் ஒன்று..


கம்போடியாவிலுள்ள preah khan எனும் பௌத்த கோவிலில் இருக்கும் சிவ லிங்கம்...12 நூற்றாண்டில் அமைக்கப்பட்டது


கேரளாவிலுள்ள ராஜ ராஜேஸ்வர கோவில்...11ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது


ஹம்பியிலுள்ள விருபாக்ஷ சுவாமி திருக்கோவில்.7ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது


மத்திய பிரதேசத்திலுள்ள போஜேஸ்வரர் கோவில்..11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது


வாதாபியிலுள்ள பூதநாதர் கோவில்..7ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது —


திங்கள்கிழமை


Sunday, 27 October 2013

ஞாயிற்றுக்கிழமை


Sunday, 13 October 2013

கௌரிவிரதம்



ஞாயிற்றுக்கிழமை


Thursday, 3 October 2013

வரலட்சுமி விரதம்


வரலட்சுமி விரதம் பற்றிய புராணக் கதைகளை காண்போம்:

1. பத்ரச்ரவா என்னும் சவுராட்டிர மன்னனின் மனைவி கசந்திரிகா. மன்னன் எப்பொழுதும் மங்கலச் சொற்களையே பேசுபவன், கேட்பவன். குணம், கல்வி, தர்மம், கற்பு ஆகிய நற்பண்புகள் கொண்ட கசந்திரிகா நிலவைப் பழிக்கும் அழகு கொண்டவள்; சினத்தை ஒழித்து எப்பொழுது ம் குளிர்ந்த சாந்தமான முகத்தை உடையவள். இவர்கட்கு 7 ஆண் மகவுகளும் ஒரு பெண் குழந்தையும் பிறந்தன. பெண் குழந்தையை சியாமா எனப் பெயரிட்டு வளர்த்து வந்தனர்.

கசந்திரிகாவின் நற்குணங்களும், நற்செயல்களும் கண்டு மகாலட்சுமி அவளிடம் கருணை கொண்டாள். ஒரு வெள்ளிக்கிழமை துவாதசி திதியன்று மகாலட்சுமி ஒரு பழுத்த சுமங்கிலி உருவெடுத்து அந்தப் புறத்தில் நுழைந்தாள். வயிறார உண்டு வாய்நிறையத் தாம்பூலம் தரித்து அமர்ந்திருந்த அரசி, “தாயே! சுமங்கிலியே! தாங்கள் யார்? எதற்க்காக வந்தீர்கள்?” என் வினவினாள். அவளை நோக்கி மகா லட்சுமி,”கசந்திரிகா! நீ நல்லவள். உத்தமி. ஆனால், லட்சுமி தேவியின் அவதார தினமான இன்று வயிறார உண்டு தாம்பூலம் தரித்துக் கொண்டு உள்ளாயே! இது நியாயமா?” எனக் கேட்டாள். செய்த தவறை ச் சுட்டிக் காட்டியவுடன் கோபமே கொள்ளாத கசந்திரிகாவுக்கு சினம் கொப்பளித்து வந்தது. உடனே மகாலட்சுமியின் கன்னத்தில் அறைந்து, ”இங்கிருந்து போய்விடு” என்றாள். கண்கள் கலங்கி கண்ணீர் தளும்பிய முகத்துடன் வெளியேறிய மகாலட்சுமியை குழந்தை சியாமா கண்டு, ”அம்மா! ஏன் அழுகிறீர்கள்? என்ன வேண்டும்?” என்றாள்.

கண்களைத் துடைத்துக்கொண்டு மகாலட்சுமி, ”பெண்ணே! உன் தாயாருக்கு நல்லது சொன்னேன். அதற்க்காக என்னை அடித்து அவமானப்படுத்தித் துரத்தி விட்டாள். அதனால்தான் திரும்பிப் போகிறேன்” என்றாள். உடனே சியாமா மகாலட்சுமி யை உபசரித்து, அமரவைத்து, “அந்த நல்லதை எனக்குச் சொல்லிக்கொடுங்களேன்” என்றாள். மனம் குளிர்ந்த மகாலட்சுமி, சியாமாவுக்கு வரலட்சுமி விரதம் கொண்டாடவேண்டிய வழி முறைகளை உபதேசித்தாள். அன்று முதல் சியாமா, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தவறாது வரலட்சுமி விரதத்தைக் கடைப்பிடித்தாள். லட்சுமிதேவியை அவமதித்ததால் பத்ரச்ரவா மன்னனிடமிருந்த செல்வங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கின. மனம் நொந்த மன்னன் இராச்சியம் கையை விட்டுப் போவதற்குள் மகளுக்குத் திருமணம் செய்ய எண்ணி மாலா தரன் என்ற மன்னனுக்கு மணமுடித்துக் கொடுத்தான். புகுந்த வீடு சென்ற பின்னும் சியாமா விரதத்தைத் தொடர்ந்தாள். மாலாதரனுக்கு செல்வம் குவிந்தது. பத்ரச்ரவாவும் கசந்திரிகாவும் பகைவர்களால் விரட்டப்பட்டு காட்டுக்கு ஓடி உணவுக்கு வழியற்று ஊர் ஊராகத் திரிந்தனர்.

செய்தியறிந்த சியாமா வருந்தி, அவர்களைத் தன் நாட்டிலேயே தங்கவைத்துத் தன் சேவகன் மூலம் உணவளித்துக் காத்து வந்தாள். நாட்கள் கழிந்தன. ஒருநாள், நிறையத் தங்க நாணயங்களை ஒரு பாத்திரத்தில் போட்டு மூடிக் கொடுத்து, “இதை வைத்துக்கொண்டு எங்காவதுபோய்ப் பிழைத்துக் கொள்ளுங்கள்” என்றாள். சியாமா அவ்விடத்தை விட்டு அகன்றதும், மூடிய பாத்திரத்தைத் திறந்து பார்த்த பத்ரச்ரவா, பொன்னுக்குப் பதில் கரித் துண்டுகளைக் கண்டு அதிர்ந்து போனான். இதை சியாமாவுக்குத் தெரியப்படுத்தினர். உடனே, சியாமா வுக்குத் தன் தாய் மகாலட்சுமியை அவமதித்தது நினைவுக்கு வந்தது. தன் அம்மாவை அழைத்து நடந்தவைகளை நினைவுபடுத்தி, அவள் செய்த தவறைச் சுட்டிக்காட்டி, விரதமிருக்கும் வழிமுறைகளையும் சொல்லிக் கொடுத்தாள்.

அவ்வாறே கசந்திரிகா வரலட்சுமி விரதமிருந்துவர நாளுக்கு நாள் நல்லவைகள் நடந்தன. பத்ரச்ரவாவுக்கும் மனதில் தைரிய லட்சுமி குடியேரியதால், தன் ஆதரவாளர்களைத் திரட்டிப் படையெடுத்து வந்து தன் நாட்டை மீட்டான். பெற்றோர் நல்ல நிலையை அடைந்ததைக் கண்ட சியாமா மகிழ்ந்தாள்.


2. சித்திரநேமி என்ற தேவகுலப் பெண் நீதிபதியாக இருந்தாள். அவள் தேவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு நடுவராக இருந்து தீர்ப்பு வழங்குவாள். ஒருமுறை அவள் பாரபட்சமாக நடந்துகொண்டதால் அன்னை பார்வதி அவளை குஷ்டரோகியாகும்படி சாபம் கொடுத்தாள்.

சித்திரநேமி சாபவிமோசனம் கேட்டு பார்வதியில் காலில் விழுந்தாள். வரலட்சுமி விரதத்தை கடைபிடித்தால் நோய் நீங்கும் என பார்வதி அருள் செய்தாள். அவள் பூலோகம் வந்து, ஒரு குளக்கரையில் அமர்ந்து வரலட்சுமி பூஜை செய்து சாபம் நீங்கப்பெற்றாள். புண்ணிய நதிகளில் தீர்த்தமாடுவது, வரலட்சுமி விரதம் இருந்ததற்கு ஒப்பானதாகும். குறிப்பாக கங்கை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, காவிரி, தாமிரபரணி ஆகிய புண்ணிய தீர்த்தங்களில் நீராடினால் காலம் முழுவதும் வரலட்சுமி விரதம் இருந்த பலன் கிடைக்கும். நாளை பெண்கள் புண்ணிய நதிகளில் தீர்த்தமாடியும் வரலாம்.மாமனார் மற்றும் மாமியாருக்கு பணிவிடை செய்யும் மருமகள்களுக்கும், வரலட்சுமி விரதம் அனுஷ்டித்த பலன் கிடைக்கும். மகத நாட்டில் வசித்த சாருமதி என்ற பெண் தனது கணவன், மாமனார், மாமியார் மற்றும் உறவினர்களை கடவுளின் வடிவமாக கருதி அவர்களுக்கு பணிவிடை செய்ததால் வரலட்சுமி விரதம் இருந்ததின் பலன் முழுவதும் கிடைத்து கணவனுடன் நீண்டநாள் வாழ்ந்தாள்.

2. பத்ரசிவன் என்ற மன்னன் சிறந்த விஷ்ணு பக்தன். அவன் மனைவி கரசந்திரிகா. இவர் களது ஒரே மகள் சியாமபாலா. அவளைத் திருமணம் செய்து கொடுத்தபின் தாய் துயருற்றாள். அவளது கவலையைத் தீர்த்து அவளுக்கு ஒரு ஆண் மகவு பிறக்க அருள் செய்ய எண்ணினாள் மகாலட்சுமி. அதனால் வரலட்சுமி விரதம் பற்றி எடுத்துக்கூற வயதான சுமங்கலி வடிவில் அவளிடம் சென்றாள். ஆனால் வந்திருப்பது லட்சுமிதேவி என்று அறியாத கரசந்திரிகா அவளை அவமானப் படுத்தி அனுப்பி விட்டாள்.

அங்கிருந்து சியாமபாலாவிடம் சென்ற மகாலட்சுமி நடந்தவற்றைக் கூறி, தான் போனால் எல்லா யோகங்களும் அரண்மனையை விட்டுப் போய்விடும் என்று கூறினாள். தன் தாயின் தவறுக்காக வருந்தி மன்னிப்புக் கோரிய சியாமபாலா, வரலட்சுமி விரதத்தைப் பற்றிக் கேட்டறிந்து சிரத்தையுடன் அதைக் கடைப் பிடித்து வரத் தொடங்கினாள். அதன் பிறகு அவளுக்குச் சுபிட்சம் பொங்கிய அதே நேரத் தில் அவளது பெற்றோர் அனைத்து செல்வங்களையும் இழந்தனர்.

தன் பெற்றோரது வறுமையை அறிந்த சியாமபாலா ஒரு குடம் நிறைய பொற்காசுகளை அவர்களுக்கு அனுப்பி வைத்தாள். அக்குடத் தில் கரசந்திரிகா கை வைத்ததும் பொற்காசுகள் கரியாகி விட்டன. இதையறிந்த மகள் அந்த ஆண்டு தன் தாயுடன் வரலட்சுமி விரதம் மேற் கொண்டாள். விரதத்தின் மகிமையால் கர சந்திரிகா தன் முந்தையை சுபிட்ச நிலையை எய்தியதோடு ஆண் வாரிசும் பெற்றாள். வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்கள் அஷ்ட போக பாக்கியங்களைப் பெறுவார்கள் என்பதை இவ்வரலாறு எடுத்துரைக்கிறது.

விரத தினத்தன்று லட்சுமி துதி, லட்சுமி வரலாறு போன்றவற்றைச் சொல்லி தங்களை முழுமையாக வழிபாட்டில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அன்று மாலை சுமங்கலிப் பெண்களை வீட்டிற்கு அழைத்து, பூஜை முடிந் ததும் மங்கலப் பொருட்களுடன் தட்சணையும் வைத்துக் கொடுத்து அனுப்ப வேண்டும்.

அனைத்து வளங்களையும் வாரி வழங்கும் வரலட்சுமியை வழிபட்டு நலம் பெறுவோமாக...

வியாழக்கிழமை


Friday, 6 September 2013

26 ம் நாள் திருவிழா பூங்காவனம்


வெள்ளிக்கிழமை


Wednesday, 4 September 2013

24 ம் நாள் திருவிழா தேர்

23 ம் நாள் திருவிழா சப்பரம்

புதன்கிழமை


Tuesday, 3 September 2013

22 ம் நாள் திருவிழா


செவ்வாய்க்கிழமை


Monday, 2 September 2013

21 ம் நாள் திருவிழா தங்கரதம்


திங்கள்கிழமை


Sunday, 1 September 2013

ஞாயிற்றுக்கிழமை


Saturday, 31 August 2013

20 ம் நாள் திருவிழா கைலாசவாகனம்


சனிக்கிழமை


Friday, 30 August 2013

19 ம் நாள் திருவிழா

வெள்ளிக்கிழமை


Thursday, 29 August 2013

18 ம் நாள் திருவிழா



வியாழக்கிழமை


Wednesday, 28 August 2013

17 ம் நாள் திருவிழா


புதன்கிழமை


Tuesday, 27 August 2013

16 ம் நாள் திருவிழா


செவ்வாய்க்கிழமை