தேவாரம்
தொண்டரஞ்சு களிறும் அடக்கிச் சுரும்பார்மலர்
இண்டைகட்டி வழிபாடு செய்யு மிடமென்பரால்
வண்டுபாட மயிலால் மான்கன்று துள்ளக்கவரி
கெண்டைபாயச் சுனைநீல மொட்டலருங் கேதாரமே
திருவாசகம்
உடையாள் உன்றன் நடுவிருக்கும்
உடையாள் நடுவுள் நீயிருத்தி
அடியேன் நடுவுள் இருவீரும்
இருப்ப தானால் அடியேன்உன்
அடியார் நடவு ளிருக்கும்
அருளைப் புரியாய்பொன் னம்பலத்தெம்
முடியா முதலே என்கருத்து
முடியும் வண்ணம் முன்னின்றே.
திருவிசைப்பா
நீறணி பவளக் குன்றமே! நின்ற
நெற்றிக்கண் உடையதோர் நெருப்பே
வேறணி புவனபோகமே! யோக
வெள்ளமே! மேருவில் வீரா!
ஆறணி சடைஎம் அற்புதக் கூத்தா!
அம்பொன்செய் அம்பலத் தரசே!
ஏறணி கொடிஎம் ஈசனே! உன்னைத்
தொண்டனேன் இசையுமாறு இசையே!
திருப்பல்லாண்டு
மிண்டு மனத்தவர் போமின்கள் :
மெய்யடியார்கள் விரைந்து வம்மின் :
கொண்டும் கொடுத்தும் குடிகுடி ஈசற்கு
ஆட் செய்மின் குழாம் புகுந்து
அண்டங் கடந்த பொருள்அள வில்லதோர்
ஆனந்த வெள்ளப் பொருள்
பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள் என்றே
பல்லாண்டு கூறுதுமே.
பெரியபுராணம்
இறவாத இன்ப அன்பு
வேண்டிப்பின் வேண்டுகின்றார்
பிறவாமை வேண்டும் : மீண்டும்
பிறப்பு உண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும்: இன்னும்
வேண்டும் நான் மகிழ்ந்துபாடி
அறவா! நீ ஆடும் போதுஉன்
அடியின்கீழ் இருக்க என்றார்.
திருச்சிற்றம்பலம்
தொண்டரஞ்சு களிறும் அடக்கிச் சுரும்பார்மலர்
இண்டைகட்டி வழிபாடு செய்யு மிடமென்பரால்
வண்டுபாட மயிலால் மான்கன்று துள்ளக்கவரி
கெண்டைபாயச் சுனைநீல மொட்டலருங் கேதாரமே
திருவாசகம்
உடையாள் உன்றன் நடுவிருக்கும்
உடையாள் நடுவுள் நீயிருத்தி
அடியேன் நடுவுள் இருவீரும்
இருப்ப தானால் அடியேன்உன்
அடியார் நடவு ளிருக்கும்
அருளைப் புரியாய்பொன் னம்பலத்தெம்
முடியா முதலே என்கருத்து
முடியும் வண்ணம் முன்னின்றே.
திருவிசைப்பா
நீறணி பவளக் குன்றமே! நின்ற
நெற்றிக்கண் உடையதோர் நெருப்பே
வேறணி புவனபோகமே! யோக
வெள்ளமே! மேருவில் வீரா!
ஆறணி சடைஎம் அற்புதக் கூத்தா!
அம்பொன்செய் அம்பலத் தரசே!
ஏறணி கொடிஎம் ஈசனே! உன்னைத்
தொண்டனேன் இசையுமாறு இசையே!
திருப்பல்லாண்டு
மிண்டு மனத்தவர் போமின்கள் :
மெய்யடியார்கள் விரைந்து வம்மின் :
கொண்டும் கொடுத்தும் குடிகுடி ஈசற்கு
ஆட் செய்மின் குழாம் புகுந்து
அண்டங் கடந்த பொருள்அள வில்லதோர்
ஆனந்த வெள்ளப் பொருள்
பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள் என்றே
பல்லாண்டு கூறுதுமே.
பெரியபுராணம்
இறவாத இன்ப அன்பு
வேண்டிப்பின் வேண்டுகின்றார்
பிறவாமை வேண்டும் : மீண்டும்
பிறப்பு உண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும்: இன்னும்
வேண்டும் நான் மகிழ்ந்துபாடி
அறவா! நீ ஆடும் போதுஉன்
அடியின்கீழ் இருக்க என்றார்.
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.