Saturday, 31 August 2013
Friday, 30 August 2013
Thursday, 29 August 2013
Wednesday, 28 August 2013
Tuesday, 27 August 2013
Monday, 26 August 2013
Sunday, 25 August 2013
Saturday, 24 August 2013
சப்பரத்தின் வெள்ளோட்டம் 2013
250 வருடங்களிற்கு மேல் பழமையான இலங்கையிலே அதி உயரமான அசையும் கட்டுமானப்பொருளாகிய ஸ்ரீ நல்லூர்கந்த சுவாமி கோயிலின் சப்பரத்தின் வெள்ளோட்டம். இந்தியாவில் உள்ள கட்டுமானத் தேர் இது தான் உலகின் அதியுயரமான அசையும் கட்டுமானப்பொருள் அதற்கு அடுத்தபடியா இலங்கையின் நல்லூர்கந்த சுவாமி கோயிலின் சப்பரம் தான் உலகின் இரண்டாவதும் மிகப்பழமையுமான அதியுயரமான அசையும் கட்டுமானப்பொருள் ஆகும். இது 250 வருடங்களிற்கு மேல் நல்லூர் கந்தனிற்கு சேவை செய்ததால் இதன் சில்லுகள் புதிப்பிக்கப்பட்டு இன்று 2013 13ம் திருவிழாவன்று வெள்ளோட்டம் விடப்பட்டது.
இது உருவான கதை வியக்கத்தக்கது. முன்னொரு காலம் நல்லூரிற்கு சப்பரதம் உருவாக்க எண்ணியபோது சிவலிங்கச்செட்டியார் என்பவர் இந்த சின்ன வேல்ப்பெருமானிற்கு பெரிய சப்பரம் தேவையா என வினாவினார். அன்று அவரது கனவில் வேல்ப்பெருமான் விஸ்வரூபம் எடுத்து தனது முழுத் தோற்றத்தை சிவலிங்கச்செட்டியாரிற்கு காண்பித்தார். இதன் மூலமே ஸ்ரீ நல்லூர்கந்த சுவாமி கோயிலின் சப்பரம் வேல்ப்பெருமானின் அருளுடன் மிகப் பிரமாண்டமாக அமைந்தது. இன்று வேல்ப்பெருமானின் முழுத் தோற்றத்தை சப்பரத்தின் மேல் பகுதியில் கண்ணாடி மூலம் காண்பிக்கப்படுகிறது.
நன்றி
Friday, 23 August 2013
Thursday, 22 August 2013
Wednesday, 21 August 2013
Tuesday, 20 August 2013
Monday, 19 August 2013
Sunday, 18 August 2013
Friday, 16 August 2013
Thursday, 15 August 2013
Wednesday, 14 August 2013
Tuesday, 13 August 2013
Monday, 12 August 2013
Saturday, 10 August 2013
கொடிச்சீலைக்கான காளாஞ்சி நிகழ்வு-1


கொடிச்சீலைக்கான காளாஞ்சி நிகழ்வு
நல்லூரின் புராதான கலாசார விழுமியங்களில் ஒன்றான இந்நிகழ்வு நல்லூர் திருவிழாவின் ஆரம்ப நிகழ்வுகளில் ஒன்றாக பண்டைய காலம் முதல் இடம்பெற்று வருகிறது.
அதாவது, வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்பு பந்தற்கால் நாட்டுதல் மற்றும் கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி அவர்களின் இல்லங்களிற்கு சென்று வழங்குதல் இதில் முக்கிய நிகழ்வுகளாகும்.
ஆரம்ப காலத்தில் கொடிசீலைக்கான காளாஞ்சியானது குதிரை வண்டியில் எடுத்துச் செல்லப்பட்டது. எனினும் கடந்த நூறு வருடங்களிற்கு மேலாக இந்த நடைமுறை மாற்றப்பட்டிருந்தது.
நாட்டில் நிலவிய அசாதாரண சூழலை தொடர்ந்து இப்பாரம்பரியம் மறைக்கப்படிருந்தது. பலரிக்கு இது தெரியாதிருந்தது.
இந்நிலையில், இவ்வருடம் நல்லூர்க்கந்தனின் திருவருள் கைகூடியதற்கமைவாக ஆலய நிர்வாகத்தினர் எடுத்துக் கொண்ட முயற்சியினால் மாட்டு வண்டியில் கொடிச்சீலைக்கான காளாஞ்சி எடுத்துச் செல்லப்பட்டது
மாட்டு வண்டியில் கொடிச்சிலை வழங்கும் மரபுடையவர்களின் இல்லத்திற்கு சென்று சிவசுப்பிரமணிய வைகுந்தவாசக்குருக்களும் சிவஸ்ரீ மாணிக்கக்குருக்களும் இணைந்து நல்லூர் கந்தனிற்கு கொடிச்சிலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி வழமை போல் உரியவர்களிற்கு வழங்கப்பட்டது
Subscribe to:
Posts (Atom)