பாடல் எண் : 5
செய்யமேனிவெளி யபொடிப்பூசுவர் சேரும்மடியார்மேல்
பையநின்றவினை பாற்றுவர்போற்றிசைத் தென்றும்பணிவாரை
மெய்யநின்றபெரு மானுறையும்மிட மென்பரருள்பேணிப்
பொய்யிலாதமனத் தார்பிரியாது பொருந்தும்புகலூரே.பொழிப்புரை :
சிவந்த திருமேனியில் வெண்ணிறமான திருநீற்றைப் பூசுபவர்.
தம்மைவந்தடையும் அடியவர்களைத் தாக்கவரும் வினைகளை
நீக்குபவர். என்றும் தம்மைப் பாடிப் பணிவார்க்கு உண்மையானவர்.
அவர் விரும்பி உறையும் இடம், அருளையே விரும்பிப் பொய்
யில்லாத மனத்தவர் நீங்காது வாழும் புகலூர் என்பர்.குறிப்புரை :
அடியார்மேல் நின்ற வினையைப் பாற்றுவார். பைய - மெதுவாக,
நோயை விரைந்துநீக்கினால் அதனால் விளையும் தீமைபெரிதாய்,
நோயின்பெருமையும், மருத்துவன்உழைப்பும் அறியப்படாதவாறு
போல, வினைகளைவிரைந்து நீக்கின்விளையுங்கேடு பலவாமாக
லின் பையப்பாற்றுவார் என்றார். பாற்றுதல் - சிதறிப்போகச்செய்தல்.
பணிவாரை - அடியார்கள் இடத்தில்; வேற்றுமை மயக்கம், மெய்ய
- உண்மையாக, பொய் - அஞ்ஞானம்.
பாடல் எண் : 5
செய்யமேனிவெளி யபொடிப்பூசுவர் சேரும்மடியார்மேல்
பையநின்றவினை பாற்றுவர்போற்றிசைத் தென்றும்பணிவாரை
மெய்யநின்றபெரு மானுறையும்மிட மென்பரருள்பேணிப்
பொய்யிலாதமனத் தார்பிரியாது பொருந்தும்புகலூரே.
பையநின்றவினை பாற்றுவர்போற்றிசைத் தென்றும்பணிவாரை
மெய்யநின்றபெரு மானுறையும்மிட மென்பரருள்பேணிப்
பொய்யிலாதமனத் தார்பிரியாது பொருந்தும்புகலூரே.
பொழிப்புரை :
சிவந்த திருமேனியில் வெண்ணிறமான திருநீற்றைப் பூசுபவர்.
தம்மைவந்தடையும் அடியவர்களைத் தாக்கவரும் வினைகளை
நீக்குபவர். என்றும் தம்மைப் பாடிப் பணிவார்க்கு உண்மையானவர்.
அவர் விரும்பி உறையும் இடம், அருளையே விரும்பிப் பொய்
யில்லாத மனத்தவர் நீங்காது வாழும் புகலூர் என்பர்.
தம்மைவந்தடையும் அடியவர்களைத் தாக்கவரும் வினைகளை
நீக்குபவர். என்றும் தம்மைப் பாடிப் பணிவார்க்கு உண்மையானவர்.
அவர் விரும்பி உறையும் இடம், அருளையே விரும்பிப் பொய்
யில்லாத மனத்தவர் நீங்காது வாழும் புகலூர் என்பர்.
குறிப்புரை :
அடியார்மேல் நின்ற வினையைப் பாற்றுவார். பைய - மெதுவாக,
நோயை விரைந்துநீக்கினால் அதனால் விளையும் தீமைபெரிதாய்,
நோயின்பெருமையும், மருத்துவன்உழைப்பும் அறியப்படாதவாறு
போல, வினைகளைவிரைந்து நீக்கின்விளையுங்கேடு பலவாமாக
லின் பையப்பாற்றுவார் என்றார். பாற்றுதல் - சிதறிப்போகச்செய்தல்.
பணிவாரை - அடியார்கள் இடத்தில்; வேற்றுமை மயக்கம், மெய்ய
- உண்மையாக, பொய் - அஞ்ஞானம்.
நோயை விரைந்துநீக்கினால் அதனால் விளையும் தீமைபெரிதாய்,
நோயின்பெருமையும், மருத்துவன்உழைப்பும் அறியப்படாதவாறு
போல, வினைகளைவிரைந்து நீக்கின்விளையுங்கேடு பலவாமாக
லின் பையப்பாற்றுவார் என்றார். பாற்றுதல் - சிதறிப்போகச்செய்தல்.
பணிவாரை - அடியார்கள் இடத்தில்; வேற்றுமை மயக்கம், மெய்ய
- உண்மையாக, பொய் - அஞ்ஞானம்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.