கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம்

Monday, 15 August 2011

திருஞானசம்பந்தர் தேவாரம் 1 ம் திருமுறை -திருப்புகலியும் திருவீழிமிழலையும்

பாடல் எண் : 6
சங்கொளி யிப்பி சுறாமகரந் தாங்கி நிரந்து தரங்கமேன்மேற்
பொங்கொலி நீர்சுமந் தோங்குசெம்மைப் புகலி நிலாவிய புண்ணியனே
எங்கள்பி ரானிமை யோர்கள்பெம்மா னெம்மிறை யேயிது வென்கொல்சொல்லாய்
வெங்கதிர் தோய்பொழில் சூழ்மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே.

பொழிப்புரை :

ஒளி உடைய சங்கு, முத்துச் சிப்பிகள், சுறா, மகரம் ஆகிய மீன்கள், ஆகிய இவற்றைத் தாங்கி வரிசை வரிசையாய் வரும் கடல் அலைகளால் மேலும் மேலும் பொங்கும் ஒலியோடு கூடிய ஓதநீர் ஓங்கும் செம்மையான புகலியில் விளங்கும் புண்ணியனே! எங்கள் தலைவனே! இமையோர் பெருமானே! எம் கடவுளே! கதிரவன் தோயும் பொழில்களாற் சூழப்பெற்ற விண்ணிழி கோயிலை விரும்பியதற்குக் காரணம் என்னையோ! சொல்வாயாக!


குறிப்புரை :

காழிக்குள்ள பெருமை கடலோதத்தில் தாழாது ஓங்கியிருப்பது என்றது முதலிரண்டடிகளான் உணர்த்தப் பெறுகின்றது. நிரந்து - வரிசையாய். தரங்கம் - அலை. பிரான் - வள்ளன்மையுடையவன். பெம்மான் - பெருமான் என்பதன் திரிபு. வெங்கதிர் - சூரியன்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.