கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம்

Monday, 15 August 2011

திருஞானசம்பந்தர் தேவாரம் 1 ம் திருமுறை -திருப்புகலூர்

பாடல் எண் : 3

பண்ணிலாவும்மறை பாடலினான்இறை சேரும்வளையங்கைப்
பெண்ணிலாவவுடை யான்பெரியார்கழல் என்றுந்தொழுதேத்த
உண்ணிலாவியவர் சிந்தையுள்நீங்கா வொருவன்னிடமென்பர்
மண்ணிலாவும்மடி யார்குடிமைத்தொழின் மல்கும்புகலூரே.

பொழிப்புரை :

இசையமைதி விளங்கும் வேத கீதங்களைப் பாடுபவன் - 
முன்கைகளில் வளையல்கள் விளங்கும் அழகிய 
கைகளை உடைய உமையம்மையைத் தனது தேவியாக 
உடையவன். தன் திருவடிகளை என்றும் தொழுது ஏத்தும் 
பெரியவர்களின் உள்ளத்தே விளங்குவதோடு அவர்களின் 
அடிமனத்தில் என்றும் நீங்காதிருப்பவன். அத்தகையோன்
விரும்பி உறையுமிடம் நிலவுலகில் வாழும் அடியவர்கள் 
குடும்பத்துடன் வந்து பணி செய்யும் புகலூராகும்.

குறிப்புரை :

பண் நிலாவும் மறை - இசை தாமே விளங்கும் வேதம். 
இறை - முன்கை, பெண் - உமாதேவி, பெரியார் - 
சிவஞானத்தில் பெரியவர்கள்; உள்நிலாவி அவர் 
சிந்தை நீங்கா ஒருவன் எனப்பிரிக்க. குடிமைத்தொழில் - 
வேளாண்மைத் தொழில்; மிராசுக்குக் குடித்தனம் என்ற 
வழக்குண்மை காண்க. பாடலின், உடையான், ஒருவன் 
இடம் புகலூரே என்பர் எனக் கூட்டுக.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.